Vidukathaigal in Tamil - 2 | தமிழ் விடுகதைகள்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால், விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.
Vidukathaigal in Tamil with an answer - 2 | தமிழ் விடுகதைகள்:
- யாரும் செய்யாத கதவு, தானாக திறக்கும், தானாக மூடும் அது என்ன?
விடை: கண் இமை - மரத்துக்கு மரம் தவுவான், குரங்கு அல்ல; பட்டை போட்டு இருப்பான் சாமியும் அல்ல. அவன் யார்?
விடை: அணில் - விடிய விடிய பூந்தோட்டம் விடிந்து பார்த்தால் வெறும் தோட்டம் அது என்ன?
விடை: நட்சத்திரங்கள் - உடன் வருவான். ஆனால் உதவிக்கு வரமாட்டன். அவன் யார்?
விடை: நிழல் - ஓன்று போனால் மற்றொன்று வாழாது அது என்ன?
விடை: செருப்பு - காகிதத்தை கண்டால் கண்ணீர் விடும். அது என்ன?
விடை: பேனா - பல அடுக்கு மாடியில் இனிப்பு மருந்து அது என்ன?
விடை: தேன் - முத்து கோட்டையிலே மகா ராணி சிறைப்பட்டு இருக்கிறாள் அவள் யார்?
விடை: நாக்கு - செய்ததை செய்யும், ஆனால் குரங்கு அல்ல. சிங்காரிக்க உதவும். ஆனால் சீப்பும் அல்ல. அது என்ன?
விடை: கண்ணாடி - இணை பிரிய மாட்டார்கள். ஆனால் நண்பர்கள் அல்ல. ஒன்று சேர மாட்டார்கள். ஆனால் பகைவர்கள் அல்ல. அது என்ன?
விடை: இரயில் தண்டவாளம் - யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை. அவன் யார்?
விடை: கரப்பான் பூச்சி - ஒட்டிலே வீடு கட்டி உள்ளே உரி கட்டி நாட்டாருக்கெல்லாம் நல்ல பொருள் அது என்ன?
விடை: புளி - ஆண்டு தோறும் வரும் அடுத்து அடுத்து வரும் வரி அது என்ன?
விடை: சன(வரி), பிப்ர(வரி ) - உயரத்தில் இருந்து விழுவான் அடி படாது. ஆனால் தரைக்கு தான் சேதாரம் ஆகும். அது என்ன
விடை: அருவி - இருட்டு அறைக்குள் என்னை இழுத்து சென்று என் மேல் தீயை வைப்பார்கள். நான் அழுவேன். பிறகு என்னுடைய தலையை துண்டிப்பார்கள். நான் யார்?
விடை: மெழுவர்த்தி.
Comments
Post a Comment