Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால், விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.
Riddles | தமிழ் விடுகதைகள்:
- வந்தால் கொண்டாட்டம் வராவிட்டால் திண்டாட்டம் அது என்ன?
விடை: மழை - கை இருக்கு பிடிக்க முடியாது ஆனால் கால் இருக்கு நடக்க முடியாது. அது என்ன?
விடை: நாற்காலி - இரவல் கிடைக்காதது ஆனால் இரவில் கிடைப்பது அது என்ன?
விடை: தூக்கம் - கடல் இருக்கும் நதி இருக்கும் தண்ணீர் இருக்காது. நாடு இருக்கும் வீடு இருக்காது. அது என்ன?
விடை: உலக வரைபடம் - ஊரை சுமந்தபடி உயரத்தில் பறப்பான் அவன் யார்?
விடை: விமானம் - வாரி வாரி வழங்குவான் வெளிச்சம் அதை வாங்காதவன் ஆள் இல்லை அவன் யார்?
விடை: மின்னல் - மரத்துக்கு மரம் தாவும் குரங்கு அல்ல பட்டை போட்டு இருப்பவன் சாமி அல்ல அவன் யார்?
விடை: அணில் - மலையில் பூக்கும் பூ அது என்ன?
விடை: குடை - பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன் யார்?
விடை: நாய் - நீண்ட உடம்புக்காரன் நெடுந்தூர பயணக்காரன் அவன் யார்?
விடை: தொடர் வண்டி - உருவத்தில் சிறியவன் உடம்பில் பெரியவன் அவன் யார்?
விடை: எறும்பு - காற்றாடி பார்ப்பது எப்படி? கல்வி வளர்வது எப்படி?
விடை: நூல் ஆல் தான். - அவன் கழற்றிய சட்டையை அடுத்தவன் போட முடியாது அது என்ன?
விடை: பாம்பு - நான் நானாக இருப்பேன் நான் யார் என்று தெரிந்த பிறகு நானாக இருக்க இருக்க மாட்டேன். நான் யார்?
விடை: புதிர் - ஒற்றை காலில் ஓய்யாரமாய் ஆடுவேன் ஓய்ந்து விட்டால் படுத்து விடுவேன் அவன் யார்?
விடை: பம்பரம்.
Comments
Post a Comment