Riddles in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால், விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.
Riddles in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:
- எட்டாத ராணியாம் இரவில் வருவாள் பகலில் மறைவாள் அது யார்?
விடை: நிலா - . ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அது என்ன மண்டபம்?
விடை: தேன் கூடு - அச்சு இல்லாத சக்கரம் அழகு காட்டும் அது என்ன சக்கரம் ?
விடை: வளையல் - அடித்து நொறுக்கி அனலில் போட்டால் ஆவியாக தோன்றி அழகாய் மணக்கும் அது என்ன?
விடை: சம்ராணி - எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது. நான் யார்?
விடை: இடியாப்பம் - தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றும், ஆனால் இறகில்லை. அவன் யார்?
விடை: தபால் தலை - என்னை தூக்குவது எளிது, ஆனால் வீசுவது கடினம், அவன் யார்?
விடை: இறகு - தொட்டு பார்க்கத்தான் முடியும். எட்டிக்கூட பார்க்க முடியாது. அவன் யார்?
விடை: முதுகு - நீங்கள் என்னை பயன்படுத்துவதற்கு முன்பு என்னை உடைக்க வேண்டும்? நான் யார்?
விடை: முட்டை - உரச உரச குழைவான், பூச பூச மனப்பான். அவன் யார்?
விடை: சந்தனம் - பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?
விடை: வெண்டைக்காய் - எனக்கு நகரங்கள் உள்ளன, ஆனால் வீடு இல்லை. எனக்கு மலைகள் உள்ளன, அனால் மரங்கள் இல்லை. எனக்குள் தண்ணீர் இருக்கிறது, அனால் மீன்கள் இல்லை. நான் யார்?
விடை: உலக வரைபடம் - நான் சுத்தமாக இருக்கும் பொழுது கருப்பு நிறமாகவும், அழுக்காக இருக்கும் போது வெள்ளை நிறமாகவும் இருக்கின்றேன். நான் யார்?
விடை: கரும்பலகை - என்னை உலர்த்தும் போது நான் ஈரமாகிறேன். நான் யார்?
விடை: துண்டு - ஆழக்குழி தோண்டி அதுல ஒரு முட்டை இட்டு அண்ணாந்து பார்த்த தொண்ணூறு முட்டை. அது என்ன?
விடை: தேங்காய்
Comments
Post a Comment