Vidukathaigal in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால், விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.
Vidukathaigal in Tamil with an answer - 1 | தமிழ் விடுகதைகள்:
- முத்துக்கோட்டைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள். புகுந்தவர் வரவில்லை. போர் நடக்குது ரத்தம் சொட்டுது. அது என்ன?
விடை: வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு - உழைக்க உழைக்க உடம்பில் தோன்றும். அது என்ன?
விடை: வியர்வை - பொரி பொரித்தேன், பெட்டியில் வைத்தேன். வெறும் பொட்டி இருந்தது அது என்ன?
விடை: நட்சத்திரம் - ஓ ஓ அண்ணா. உயர்ந்த அண்ணா. தோலிலே என்ன 90 முடிச்சு. அது என்ன?
விடை: பனை மரம் - வெள்ளை குதிரைக்கு பச்சை வால். அது என்ன?
விடை: முள்ளங்கி - எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது அது என்ன?
விடை: மின் விசிறி - குண்டன் குழியில் விழுந்துவிடுவான். குச்சி பையன் தூக்கி விடுவான். அது என்ன?
விடை: பணியாரம் - பூ பூக்கும். காய் காக்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன?
விடை: தேங்காய் - ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஆனால் ஓய்வு எடுத்துவிட்டால் இயங்காது. அது என்ன?
விடை: இதயம் - உடல் சிவப்பு; வாய் அகலம்; உணவு காகிதம்; நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி - ஊரெல்லாம் ஒரே விளக்கு அதற்கு ஒருநாள் ஓய்வு. அது என்ன?
விடை: நிலா - உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு; பூ உண்டு நான் யார்?
விடை: நாணயம் - கண்ணில்லாத என்னால் அழ முடியும். பார்க்க முடியாது. நான் யார்?
விடை: மேகம் - முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை. நான் யார்?
விடை: நாக்கு - கொதிக்கும் கிணற்றில் குதித்து குண்டாகி வருவான். அவன் யார்?
விடை: பூரி
Comments
Post a Comment